தொபியாஸ் ஹெல்ஜின், ஹெலன் நகர்
Poems

கடற்கரை இலக்கிய வட்டம் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நடத்திய கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கவிதை

ஆரறிவார் இவர் சீர்…?? முக்குவப் புத்தகத்தின் முக்கிய முத்திரையாய் … முக்கடல் மீனவத்தின் மூத்தநல் பெருந்தகையாய்… மக்களின் மனமறிந்த பக்குவ மந்திரியாய்…. சித்திரப் புன்னகையால் சீர்புகழ்  பலவாய்த்த … “லூர்தம்மாள்”  சீமாட்டி வான்புகழ்  ஓங்கிடவேவாழ்த்திசை யாத்திடுக மாக்கடல் வேட்டத்து மாந்தர்களே! மணக்குடிப் பெருந்துறையில் பெருங்குடிச்  சீர்மரபில் பிறந்திட்ட சுடர்கொடியே!.. சிறந்தவர் “சைமன” வர் திருக்கரம் தனைப்பற்றி மணமுடித்(து) திருக்குடும்பம் வனைந்திட்ட வளர்மதியே!.. பக்திப் பண்பாட்டோடு புத்திப்பே ரழகினோடும் பூரணமான ஆரணங்கே!… ஆழிக் காய்ந்தாலும் அழியாது உன்நாமம் வாழியவே!  கர்மத் தலைவனவன் காரியத் திருஅவையில்சீரியக் கொள்கைக்காய்கர்ஜனை செய்திட்ட ஏறொத்த […]

ராஜேஷ்,தூத்தூர்
Poems

கடற்கரை இலக்கிய வட்டம் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நடத்திய கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கவிதை

லூர்தம்மாள் சைமன் மணக்குடியில்  பிறந்தவளே  மேலமணக்குடியில் சைமணை  மணந்தவளே  மீனவர் குடி காக்க குளச்சலில் குடி வந்தவளே  சேரநாட்டு தேர்தலிலே அரசியல் களம் புகுந்தவளே மக்களின் பேரன்பை  பெற்றவளே  தாய் நாடாம் தமிழ் நாடோடு நம் குமரி இணைந்ததும் முதல் பெண்ணாக குளச்சல் தொகுதி வென்றவளே  கோட்டைக்குள்ளே  கொடிபறக்க வீரநடை போட்டு கால் பதித்த முதல் பெண் மந்திரி ஆனவளே  தொலைநோக்கு திட்டங்கள் பல மீன்பிடி தொழில் உட்புகுத்தி மீனவர்கள் வாழ்வினிலே புத்துயிரை புகுத்தினவளே  ஊர்  […]

ஜெஸ்டின், நித்திரவிளை
Poems

கடற்கரை இலக்கிய வட்டம் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நடத்திய கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கவிதை

லூர்தம்மாள் சைமன் ஆழ்கடலில் குதித்ததெழுந்து,வாழ்வியலில் கலந்திருக்கும்மீனவர் குலமகளே.! கரைசேரும் அலைபோல, காலமெல்லாம் மீனவரின் நெஞ்சத்துள் கோபுரமாய் எழுந்தவளே…! கடலோர வரலாற்றின்சரித்திரமாய் வலம்வந்தஉம்புகழை பார்போற்றும்நிலைவேண்டும்..! இயந்திர படகும்,கூட்டுறவு சங்கமும்,எம்மினத்திற்கு சமர்ப்பித்ததாயுள்ளமே..! எம்மினத்தில் மீண்டும் நீ பிறக்க வேண்டும்!மீனவனின் துன்பம் விலக வேண்டும்..!