திருமண விழாவும், திரைமீளர் நூல் வெளியீட்டு விழாவும்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சார்ந்த கலைச்செல்வன் ,  மடவாமேடைச் சார்ந்த திவ்யபாரதி ஆகியோரது திருமண விழா 26-04-2021 திங்கள் அன்று காரைக்கால் ஸ்ரீ சாதனா மஹாலில் வைத்து நடைபெற்றது . விழாவில் மணமகன் கலைச்செல்வன் குட்டியாண்டி எழுதிய திரைமீளர் (குறுநாவல்) நூல் வெளியீட்டு  நிகழ்வும் நடந்தது . 
 
நூலை கலைச்செல்வன் குட்டியாண்டி அவர்களது பெற்றோர் திரு .குட்டியாண்டி , திருமதி பார்வதி ஆகியோர் வெளியிட , தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் பெற்றுக் கொண்டனர் . கலைச்செல்வன் குட்டியாண்டி அவர்களின் முதல் நூலான திரைமீளர் குறுநாவலை கடற்கரை பதிப்பகம் வெளியிட்டுள்ளது . இவர் இதற்கு முன் ‘ஊரு இது நம்ம ஊரு’ எனும் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . நூல் குறித்து குறிப்பிடும் எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான இரையுமன் சாகர் , திரைமீளர் ஆளமான ஓர் படைப்பு என்றும் , இக் குறுநாவல் தமிழக நெய்தல் வெளியில் இவருக்கு நிச்சயம் ஓர் அடையாளத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*