கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர், மணவிள , செயின்ட். ஆன்றணி மெட்றிக் மேனிலைப்பள்ளியில் இன்று (14/10/2019) குழந்தைகள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஆசிரியர்களால் நிகழ்ச்சி நடத்தப்பட்டது
காலை 9 மணியளவில் பள்ளிமுதல்வர் திருமதி. தங்கம்மா வில்லியம் அவர்கள் தலைமையில் ஆசிரியர்களின் தொடக்கப்பாடலுடன் அசம்பளி நடைப்பெற்றது. திருமதி. பின்சி ஆசிரியர் திருக்குறள் கூற, ஆங்கிலத்திலும், தமிழிலும் முறையே திரு. ஜூட்சன் க்றூஸ் , திருமதி்.விஜி ஆசிரியர்களால் செய்தி வாசிக்கப்பட்டது. திருமதி. செல்வி ஆசிரியையால் இன்றய சிந்தனை வழங்கப்பட்டது. திருமதி. றோஸ்க்ளின் ஆசிரியையால் வேதாகமம் வாசிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆசிரியர்களின் நிகழ்ச்சி நடைப்பெற்றது. செல்வி. தர்ஷினி ஆசிரியை வரவேற்புரை வழங்குனார். குழந்தைகள் தின உரை ஆங்கிலம் மற்றும் தமிழில் முறையே ்திருமதி. குமாரி சிந்து, திரு. சசி ஆசிரியர்களால் நிகழ்த்தப்பட்டது. ஆசிரயை ட்றீசா பாடல் பாட, ஆசிரியர்களின் ஆடல்,பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. திருமதி் சௌமியா ஆசிரியை நன்றியுரை வழங்கினார். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை திரு. ஜோஸ்பின் ஆசிரியர் தொகுத்து வழங்கினார்.
Good to know. Thanks Kadarkarai News.