சென்னையில் ஒருநாள் கால்பந்து போட்டி. தூத்தூர் பஞ்சாயத்து – A அணி வெற்றி.

சென்னைவாழ் குமரி முக்குவர் வெல்பேர் சொசைட்டி சார்பில்  இரண்டாவது ஒரு நாள் கால்பந்து போட்டி (ஐவர்) இன்று சென்னையில் நடைபெற்றது.  சென்னை சேம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இப்போட்டியில் குமரி மாவட்ட மீனவ அணிகாளான தூத்தூர் பஞ்சாயத்து A அணி, தூத்தூர் பஞ்சாயத்து B அணி,  சி கே எம் எஸ் அணி, சென்னை FC அணி, மார்த்தான்டந்துறை அணி, வாணியகுடி அணி, குமரி கில்லீஸ் அணி, சென்னை சவுத் வள்ளவிளை ஆகிய அணிகள் லீக் ஆட்டத்தில் மோதின.  முதல் அரை இறுதியில் தூத்தூர் பஞ்சாயத்து A அணியும்  மார்த்தான்டந்துறை அணியும் மோதின.  இரண்டாவது அரை இறுதியில் தூத்தூர் பஞ்சாயத்து B அணியும் சென்னை FC அணியும் மோதின. அறையிறுதியில் வெற்றி பெற்று தூத்தூர் பஞ்சாயத்து A அணியும்,  தூத்தூர் பஞ்சாயத்து B அணியும் இறுதி போட்டியில் மோதின. விறுவிறுப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் தூத்தூர் பஞ்சாயத்து A அணி கோப்பையை வென்றது.  தூத்தூர் பஞ்சாயத்து B அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. 

சிறந்த ஆட்ட நாயகனாக தூத்தூர் பஞ்சாயத்து A அணியை சார்ந்த பியூட்டின் அவர்களும்,  சிறந்த எமெர்ஜிங் வீரராக தூத்தூர் பஞ்சாயத்து A அணியை சார்ந்த சைஜின் அவர்களும் தேர்வு செய்யப் பட்டனர். சிறந்த கோள் கீப்பராக சென்னை சவுத் வள்ளவிளை அணியின் ரதீஷ் தேர்வு செய்யப்பட்டார்.  வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*