குமரி மாவட்டத்தில் நாஞ்சில் கரியர் அகாதெமி சார்பில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், பண்பாடு, மாணவர் நலன், முதலிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியோருக்கு அன்னை ஆதா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விருதினை பணி. வின்சென்ட் B வில்சன், திரு. ஜாண், எழுத்தாளர் பெர்லின் ஆகிய 3 பேர் பெற்றனர். 3-2-2019 அன்று அழகியமண்டபத்தில் உள்ள மம்மா ஆதா செண்டரில் நடைபெற்ற நிகழ்வில் இலக்கிய சேவைக்காக குறும்பனை மீனவ கிராமத்தை சார்ந்த எழுத்தாளர் குறும்பனை சி பெர்லின் அவர்கள் விருது விருது பெற்றார். விருதுடன் பாராட்டு பாத்திரமும் ரூபாய் 50 ஆயிரம் ரொக்க தொகையும் வழங்கப்பட்டது.
விருது பெற்ற பெர்லின் அவர்களுக்கு கடற்கரை இலக்கிய வட்டம் மற்றும் நெய்தல் எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஆண்டுக்கான மம்மா ஆதா இலக்கிய விருது குமரி ஆதவனுக்கும், அதற்கு முதைய ஆண்டு மலர்வதிக்கும் வழங்கப்பட்டது.இந்த ஆண்டு இலக்கிய விருது நண்பர்பெர்லினுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. எனது நண்பருக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
…. குமரி ஆதவன் …
9442303783
நன்றி!