அன்புடையீர் வணக்கம் .
கடற்கரை இலக்கிய வட்டத்தின் கடற்கரை விருது 2020 நிகழ்வு நாகர்கோவில் அசிசி வளாகத்தில் 20-11-2020 (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது . விழாவுக்கு முதுமுனைவர் ஜேம்ஸ் ஆர் டேனியல் அவர்கள் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி நிறைவுப பேருரையாற்ற உள்ளார் . சிறந்த கட்டுரைக்கான விருதை எழுத்தாளர் தொ. சூசை மிக்கேல் ( வாரிக் கொடுத்த வளைகுடா ) அவர்களும் , சிறந்த சிறுகதைக்கான விருதை எழுத்தாளர் ஆன்றணி அரசு ( சொல்லிச் சென்ற கதை ) அவர்களும் , சிறந்த கவிதைக்கான விருதை எழுத்தாளர் அருள் ( அவளும் அழகுதான் ) அவர்களும் , சிறந்த நாவலுக்கான விருதை எழுத்தாளர் ஜேசுதாஸ் ஜெறோம் ( சேலாளி ) அவர்களும் பெற உள்ளனர் .
ஊடகவியலாளர் ஜீன், எழுத்தாளர் குமரி எழிலன், எழுத்தாளர் சப்திக , எழுத்தாளர் குறும்பனை சி பெர்லின், ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர் .அத்தோடு கடற்கரை இலக்கிய வட்டம் நடத்திய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது
முன்னதாக, கடற்கரை இருமாத மின்னிதழை முதுமுனைவர் ஜேம்ஸ் ஆர் டேனியல் அவர்கள் அறிமுகம் செய்ய , கடற்கரை இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர் இரையுமன் சாகர் இதழ் குறித்து அறிமுக உரையாற்றுவார் .
வரவேற்புரை: எழுத்தாளர் ஜாக்குலின் மேரி .
நிகழ்வை திரு . A . ஜஸ்டின் ஒருங்கிணைப்பு செய்கிறார்.
விழாவில் கலந்து கொள்ள அனைவரையும் அன்பாய் அழைக்கிறோம் .
– கடற்கரை இலக்கிய வட்டம் ,
குமரி மாவட்டம் .
Be the first to comment