கடலில் பெய்த மழை நூல் விமர்சனம்

கடற்கரை இலக்கிய வட்டத்தின் நூல் விமர்சன கூடுகை 15-09-2018 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு எழுத்தாளர் குறும்பனை பெர்லின் அவர்கள் தலைமையில் இரையுமன்துறை கடற்கரையில் வைத்து நடைபெற்றது. 

கூட்டத்தில் செராக் நிற்றோ எழுதிய கல் நெஞ்சமும் அறியா வயதும் குறுநாவல் நூல் குறித்த விமர்சனம் நடைபெற்றது. நூல் ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கடற்கரை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.  எழுத்தாளர் குறும்பனை பெர்லின்,   எழுத்தாளர் ஜாக்குலின் மேரி மற்றும் எழுத்தாளர் பைஜு ஆகியோர் நூல் விமர்சனம் செய்தனர்.  நூல் ஆசிரியர் செராக் நிற்றோ ஏற்புரை வழங்கினார். கூட்டத்தில் நெய்தல் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.  சமூக ஆர்வலர் டில்டன் நன்றி கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*