தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (6.11.2019) அதிகாலை 2 மணி அளவில் பூத்துறையை சார்ந்த சீபு என்பவருக்கு சொந்தமான நிர்மல் மாதா விசைப்படகில் குமரி மாவட்டம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார்கள். நேற்று மாலையில் திடீரென படகு பழுதடைந்துள்ளது. முட்டம் ஆழ்கடல் பகுதியில் 8 நாட்டிக்கல் தொலைவில் தத்தளிக்கும் நிர்மல் மாதா விசைப்படகையும் அதிலுள்ள தமிழகம் மற்றும் வட இந்தியா 10 மீனவர்களையும் மீட்பதற்காக பூத்துறை சார்ந்த சிபு என்பவருக்கு சொந்தமான ஜீசஸ் ‘ரிடி மர்’ என்ற விசைப்படகு தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று காலை (7.11.2019) புறப்பட்டு சென்றுள்ளது, இவர்கள் நடுக்கடலில் தத்தளத்த நிர்மல் மாதா விசைபடகையும், 10 மீனவர்களையும் ரெடிமர் விசைபடகுமூலம் மீட்டனர்.
Related Articles
கடலோர மக்கள் சங்கம் பொன்விழா
கடலோர மக்கள் சங்கம் coastel people’s organisation (C.P.O) பொன்விழா நிகழ்ச்சி 2-01-2019 அன்று மாலை 6 மணிக்கு குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையில் நடைபெற்றது. சிபிஒ வின் முன்னாள் தலைவர் திரு ஒளிவர் ஜாய் அவர்கள் வரவேற்று பேசினார். வள்ளவிளையை சார்ந்த IAS அதிகாரி திரு அலெக்ஸ்சாண்டர் அவர்கள் […]
அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது – கடலில் பெய்த மழை
கடலில் பெய்த மழை நூலுக்காக அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதுக்கு தேர்வாகியிருக்கும் வழக்கறிஞர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு கடற்கரை இலக்கிய வட்டத்தின் வாழ்த்துக்கள்!
முத்தூட் பைனான்ஸ் கிளைகள் முடல்
மிகப் பெரிய பைனான்ஸ் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் மூடப் போகிறார்கள். நகை அடமானம் வைத்திருப்பவர்கள் 3 மாதத்திற்கள் தொகையை செலுத்திவிட்டு நகையை பெற்றுக் கொள்ள வேண்டுமாம். யாராவது நகை அடமானம் வைத்திருந்தால் மீட்டுக்கவும் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
Be the first to comment