நடுக்கடலில் தத்தளத்த நிர்மல் மாதா விசைபடகையும், 10 மீனவர்களையும் மீட்ட சக மீனவர்கள்

தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (6.11.2019) அதிகாலை 2 மணி அளவில் பூத்துறையை சார்ந்த சீபு என்பவருக்கு சொந்தமான நிர்மல் மாதா விசைப்படகில் குமரி மாவட்டம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார்கள். நேற்று மாலையில் திடீரென படகு பழுதடைந்துள்ளது. முட்டம் ஆழ்கடல் பகுதியில் 8 நாட்டிக்கல் தொலைவில் தத்தளிக்கும்  நிர்மல் மாதா  விசைப்படகையும் அதிலுள்ள தமிழகம் மற்றும் வட இந்தியா 10 மீனவர்களையும் மீட்பதற்காக பூத்துறை சார்ந்த சிபு என்பவருக்கு சொந்தமான ஜீசஸ் ‘ரிடி மர்’ என்ற விசைப்படகு தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று காலை (7.11.2019) புறப்பட்டு சென்றுள்ளது, இவர்கள் நடுக்கடலில் தத்தளத்த நிர்மல் மாதா விசைபடகையும், 10 மீனவர்களையும்  ரெடிமர் விசைபடகுமூலம் மீட்டனர்.   

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*