நவம்பர் 21 உலக மீனவர்தின விழா மாநாடு குளச்சல் துறைமுகத்தில் நடைபெறவிருக்கின்றது. குமரி மாவட்ட கடலோர மீனவர்களும் உள்நாட்டு மீனவர்களும் இணைந்து குளச்சலில் சங்கமிக்கும் இவ்விழாவிற்கு தமிழக அரசின் மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு. D.ஜெயக்குமார் அவர்களும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. H.வசந்தகுமார் அவர்களும், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு.நசரேன் சூசை அவர்களும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர். திரு. பிரசாந்த்.மு.வடநேரே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
குளச்சலில் மீனவர்தின மாநாடு நடைபெறும் இடத்தை மீனவத் தலைவர்கள் பார்வையிட்டனர். அப்போது கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குநர். ஸ்டீபன், செயற்குழு உறுப்பினர்கள், குளச்சல் பங்குத்தந்தை. மரிய செல்வன், குளச்சல் ஊர் நிர்வாகிகள், விசைப்படகு யூனியன் நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Good
நன்றி!