நாகை மீனவர் கடலில் தவறி விழுந்து மரணம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சின்னகுடி மீனவ கிராமத்தில் வசித்து வருபவர் மதியழகன் வயது 55 .இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 27-6-2020 அன்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் வழக்கம்போல மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடலில் தவறி விழுந்து இறந்துவிட்டார்.

இறந்துபோன மதியழகனுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் .

இறந்துபோன மதியழகன் உடல் மயிலாடுதுறை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதிச் சடங்கு இன்று 27-6-2020 மாலை 4 மணியளவில் அவரது சொந்த இல்லத்தில் வைத்து நடைபெற்றது.

இச் சோக சம்பவத்தால் சின்னங்குடி மீனவ கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. மட்டுமல்லாமல் இந்த செய்தி கேட்டு மீனவ கிராமங்கள் அனைத்துமே சோகக் கடலில் மூழ்கியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*