தேஷ்சக்தி கப்பல் மோதி காணாமல்போனவர்களையும் இறந்துவிட்டதாக அறிவிப்பு

 

கடந்த 6-8-2018 அன்று முனம்பம், கேரளா மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஓசியானிக் என்னும் பெயரிலான IND.KL.04.MM2647 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்கள்.

அதிகாலைப் பொழுதில் இந்திய கடல் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான தேஷ்சக்தி என்கிற பெயரிலான கப்பல் மோதி விபத்து நேர்ந்துவிட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 4 பேரும் கேரளாவைச் சார்ந்த ஒருவரும் இறந்து விட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 6 பேரும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஒருவரும் காணாமல் போனார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த ஒருவரும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஒருவரும் படுகாயமடைந்தார்கள். தொடர் முயற்சிகளுக்குப்பின் காணாமல்போனவர்களையும் இறந்துவிட்டதாக அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

தமிழ்நாடு முதல்வரின் நிவாரணத்தொகையோடு எர்ணாகுளம் உயர்நீதிமன்ற வழக்கின் அடிப்படையிலான கப்பல் கழக இழப்பீடும் இறந்த பிறரைப்போல இவர்களும் பெற்றுக்கொள்ள இது உதவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*