நடுக்கடலில் புயலில் தத்தளித்த 35 மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கேரளா மாநிலத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பல்லக்கு மற்றும் ஹரிஷ் மா விசைப்படகுகளில் 35 மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் படகை கரைக்கு செலுத்த இயலாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். நங்கூரம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் படகும் 35 வீரர்களும் காற்றின் திசையில் அடித்து செல்லப்பட்டது. தெற்காசிய மீனவர் தோழமை மும்பையில் உள்ள கடலோர மீட்பு படையிடம் கோரிக்கை வைத்து  அவர்களோடு தொடர்பு கொண்டு பேசினார்கள். தற்போது கரிஸ்மா படகின் ஓட்டுநர் ஜார்ஜ் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பகுதியில் காற்றின் வேகம் குறைந்து உள்ளதால் அவர்கள் இரண்டு படகும் கார்வார் மீன்பிடித் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக செய்தியை உறுதி செய்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*