MFC கால்பந்து போட்டி – செயின்ட் லூசியாள் அணி வெற்றி

மார்த்தாண்டத்தில் நடைபெற்ற MFC  கால்பந்து போட்டியில் இரையுமன்துறை செயின்ட் லூசியா அணி கோப்பையை வென்றது.

போட்டியில் திறன்வாய்ந்த பல அணிகள் பங்கேற்ற. முதல் ஆட்டத்தில் மார்த்தாண்டத்தை வெற்றிகண்ட  செயின்ட் லூசியாள் அணி தொடர்ந்து, கொல்லங்கோடு  எஸ் எம் ஆர் சி  அணியை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்து, தூத்தூர் நேதாஜி அணியை வென்று போட்டியின் இறுதி சுற்றில் நுழைந்தது.

இறுதி சுற்றில் செயின்ட் லூசியாள் அணி பூத்துறை SJB அணியுடன் மோதியது  விறுவிறுப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் பூத்துறை SJB அணி முதல் கோலை போட்டது, SJB அணி வெற்றி பெறும் என்கிற நிலையில் கடைசி 5 நிமிடத்தில் செயின்ட் லூசியாள் கோல் அடித்து சமநிலை பெற்றது, இதனை தொடர்ந்து கூடுதல் நேரம்  ஒதுக்கப்படவே,  செயின்ட் லூசியா அணி  கோல் அடித்து 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.

– இரையுமன் சாகர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*