கடற்கரை இலக்கியம் வட்டம் நடத்திய புகைப்படப்போட்டி – வெற்றியாளர்கள் அறிவிப்பு.

கடற்கரை இலக்கிய வட்டத்தின்,  கடற்கரைநியூஸ்.காம் ( kadarkarainews.com) இணையதள பக்கத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி ‘நெய்தல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற  புகைப்பட போட்டியில் பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கு வந்துசேர்ந்த புகைப்படங்களிலிருந்து மிகச்சிறந்த புகைப்படமாக திரு. பிலிஸ்து தமிழ் அவர்கள் கிளிக் செய்த  ‘கடற்கரை புகைப்படம்’ முதலிடத்தை பிடித்துள்ளது . அற்புதமான புகைப்படத்தை தன் காமிரா கண் மூலம் பதிவு செய்து  முதலிடம் பெற்ற திரு. பிலிஸ்த்து தமிழ் அவர்களுக்கும்,  அழகான துறைமுக காட்சியை பதிவு செய்து இரண்டாம் இடம் பிடித்த திரு . கவின் ஆஸ்கர் அவர்களுக்கும்  கடற்கரை இலக்கிய வட்டத்தின் மனமார்ந்த வாழ்த்துகள் !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*