கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்களை தேர்வுசெய்து விருது வழங்கப்பட்டு வருகிறது . இந்த ஆண்டும் விருதுக்கு நூல்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது வெற்றியாளர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது . 2019 ல் குமரி மாவட்ட நெய்தல் எழுத்தாளர்களால் எழுதி வெளிவந்த நூல்களில் சிறந்த சிறுகதை , கவிதை , கட்டுரை , நாவல் என நான்கு நூல்கள் விருது பெறுகின்றன .
சிறந்த சிறுகதையாக ஆன்றணி அரசு அவர்கள் எழுதிய சொல்லிச்சென்ற கதை , சிறந்த கவிதை நூலாக அருள் அவர்கள் எழுதிய அவளும் அழகுதான் , சிறந்த கட்டுரையாக தொ. சூசைமிக்கேல் அவர்கள் எழுதிய வாரிக்கொடுத்த வளைகுடா , சிறந்த நாவலாக ஜேசுதாஸ் ஜெறோம் அவர்கள் எழுதிய சேலாளி ஆகியன தேர்வாகி உள்ளது . நல்ல நூல்களை தந்த நான்கு பேருக்கும் கடற்கரை இலக்கிய வட்டத்தின் வாழ்த்துகள் ..!
RED BULL Neymar Jr ‘s Five கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் AMET FC அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கொல்கத்தாவில் நடைபெறும் தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இந்த அணி பெற்றுள்ளது. இதில் வெற்றி […]
கடல் பூக்கள், மரியான், வன்மம், உள்குத்து போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் சில மலையாளப் படங்களிலும் நடித்தவர் முட்டம் வால்டர். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு கடல் தொழில் செய்யும் இவர் ஏற்கனவே நெய்தல் மக்களின் பாடுகளை ‘வர்ளம்” என்ற நாவலாக எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது கடலோர மக்களின் வாழ்வியலை […]
புறக்கணிக்கப்பட்ட கற்கள் – சிறுகதை (ஒலி வடிவில்) எழுதியவர் : தொ. ஹெல்ஜின்குரல் : இரையுமன் சாகர்வெளியீடு : கடற்கரை இலக்கிய வட்டம் https://youtu.be/Ipv7k4H8qZ0
Copyright © 2018-2019 | kadarkarainews.com All rights reserved.
Be the first to comment