கடற்கரை விருது 2020 – வெற்றியாளர்கள் அறிவிப்பு

கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்களை தேர்வுசெய்து விருது வழங்கப்பட்டு வருகிறது . இந்த ஆண்டும் விருதுக்கு நூல்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது வெற்றியாளர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது . 2019 ல் குமரி மாவட்ட நெய்தல் எழுத்தாளர்களால் எழுதி வெளிவந்த நூல்களில் சிறந்த சிறுகதை , கவிதை , கட்டுரை , நாவல் என நான்கு நூல்கள் விருது பெறுகின்றன .

சிறந்த சிறுகதையாக ஆன்றணி அரசு அவர்கள் எழுதிய சொல்லிச்சென்ற கதை ,  சிறந்த கவிதை நூலாக அருள் அவர்கள் எழுதிய அவளும் அழகுதான் , சிறந்த கட்டுரையாக தொ. சூசைமிக்கேல் அவர்கள்  எழுதிய வாரிக்கொடுத்த வளைகுடா , சிறந்த நாவலாக ஜேசுதாஸ் ஜெறோம் அவர்கள் எழுதிய சேலாளி ஆகியன தேர்வாகி உள்ளது . நல்ல நூல்களை தந்த நான்கு பேருக்கும் கடற்கரை இலக்கிய வட்டத்தின் வாழ்த்துகள் ..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*