கடற்கரை இலக்கிய வட்டத்தின் இலக்கிய நிகழ்வு

கடற்கரை இலக்கிய வட்டத்தின் இலக்கிய நிகழ்வு 13-12-2020 அன்று மாலை 4 மணிக்கு  சின்னத்துறை புனித யூதா படிப்பகத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் முட்டம் எஸ் வால்டர் அவர்களின் நெடுவாங்கல் சிறுகதை நூலை எழுத்தாளர் ஆன்றணி அரசு அவர்களும், கவிஞர் விஜய் சேசுலா அவர்களின்  உடையும் கண்ணாடிகள் கவிதைநூலை திரு. மில்லட் போபின் அவர்களும், எழுத்தாளர் அருள் அவர்களின் தண்ணீருக்காக நாவலை எழுத்தாளர் ஜாக்குலின் மேரி அவர்களும் விமர்சனம் செய்தனர். நூலாசிரியர்கள் ஏற்புரை வழங்கினர். எழுத்தாளர் குமரி தோழன் அவர்கள் கவிதை என்பது யாதெனில்  எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் நெய்தல் எழுத்தாளர்கள், வாசகர்கள், படிப்பக  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வை எழுத்தாளர் இரையுமன் சாகர் ஒருங்கிணைப்பு செய்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*