நேற்று (14-12-2020) குறும்பனை சி பெர்லின் அண்ணன் அவர்களுடைய மகளின் திருமண நிகழ்வு குறும்பனையில் மிக சிறப்பாக நடைபெற்றது. தன் சிந்தை, சொல், செயல் அனைத்தையுமே மீனவ சமூகத்துக்காக அற்பணித்து, நூல்கள் எழுதியும், களப்போராட்டங்கள், களப்பணிகள் செய்தும், ஒவ்வொரு அதிகாரிகளிடமும், துறைகளிடமும் மனு மூலமும் தொண்டைகிழிய பேசியும் கோரிக்கைகளை முன் வைத்தும் பயணிக்கும் அவருடைய மெனக்கெடலை திருமண நிகழ்விலும் காணமுடிந்தது. புதுமண தம்பதிகள் நீடுளி வாழ வாழ்த்தும் அதே வேளையில் இறைவன் பெர்லின் அண்ணனுக்கும் நீண்ட ஆயுளை கொடுக்க பிரார்த்திக்கிறேன் .
விழாவில் எனக்கு தெரிந்து, முதுமுனைவர் ஜேம்ஸ் ஆர் டேனியல், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கடல் ஆராய்சியாளர் ஒரிசா பாலு, பச்சைதமிழகம் கட்சி உதயகுமார் போன்ற நிறைய பிரபலங்கள் பங்கேற்றார்கள்.
மணவிழா அரங்கில் மணமகள் பெனிற்றோ அவர்கள் எழுதிய Media Misrepresentation vs Reality எனும் நூல் வெளியிடப்பட்டது . ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள் நூலை வெளியிட முதுமுனைவர் ஜேம்ஸ் ஆர் டேனியல் அவர்களும் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களும் பெற்றுக்கொண்டனர் .
புதுமண தம்பதிகளுக்கும், பெர்லின் அண்ணனுக்கும், கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துகள்
– இரையுமன் சாகர்.
Be the first to comment