இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநி திருமிகு. N.தளவாய் சுந்தரம் அவர்களை கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குநர் அருள்பணி. ஸ்டீபன் மீனவ கூட்டமைப்பு நிர்வாகி குறும்பனை பெர்லின் குளச்சல் பங்குத்தந்தை அருள்பணி. மரிய செல்வன் குளச்சல் விசைப்படகு யூனியன் நிர்வாகி திரு. பிரான்சிஸ் தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய சேர்மன் திருமிகு. சேவியர் மனோகரன் அதிமுக மீனவர் அணி நிர்வாகி திரு. ஆன்றோ ஆகியோர் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர்.
மிடாலம் மற்றும் மேல் மிடாலம் கிராமங்களில் கடல் அலை தடுப்பு சுவர் அமைப்பது தொடர்பாகவும் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தும் பொருட்டும் மிடலாம் பங்கு தந்தை ஜிம் அவர்கள் தலைமையில் மிடாலம் மீனவர் சங்கத் தலைவர் சிபில்.. நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் மேல்மிடாலம் கிறிஸ்டோபர் அகில இந்திய காங்கிரஸ் காரியகமிட்டி உறுப்பினர் தாரகை ஆகியோர் அடங்கிய குழு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து மனு அளித்தனர்..
இந்த நிகழ்வை அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் S A.மகேஷ் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்..
Be the first to comment