சென்னையில் நெய்மர் ஜுனியர் ஐவர் கால்பந்து போட்டி. இரையுமன்துறை வீரர்கள் அபார ஆட்டம்

RED BULL  Neymar Jr ‘s Five  கால்பந்து போட்டிக்கான  தகுதி சுற்று போட்டி சென்னையில் நடைபெற்றது.  இதில் AMET FC அணி வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் கொல்கத்தாவில் நடைபெறும் தேசிய அளவிலான  கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இந்த அணி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றால் பிரேசில் நாட்டில் நடைபெறும் இறுதி சுற்று போட்டியில் பங்கு பெறுவர்.  அணியின்  கேப்டனாக நமது பகுதியை சார்ந்த இரையுமன்துறை அஜய் (த/பெ. அத்தினாஸ் )  கேப்டனாக பணியாற்றி உள்ளார்.  கூடவே இரையுமன்துறையை சார்ந்த லிஜோ ( த/பெ. குருசப்பன்) சிறப்பாக ஆடியுள்ளார். இருவரும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*