கடல் பூக்கள், மரியான், வன்மம், உள்குத்து போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் சில மலையாளப் படங்களிலும் நடித்தவர் முட்டம் வால்டர். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு கடல் தொழில் செய்யும் இவர் ஏற்கனவே நெய்தல் மக்களின் பாடுகளை ‘வர்ளம்” என்ற நாவலாக எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது கடலோர மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் கடலோர மொழியிலேயே இவர் எழுதிய ‘நெடுவாங்கல்” என்கிற சிறுகதை நூல் வெளியீட்டு விழா முட்டம் பங்குத் தந்தை அருட்பணி. அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
விழாவுக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு நூலை வெளியிட்டுப் பேசினார். அருட்பணி ஸ்டீபன் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர்கள்; குமரி ஆதவன், பள்ளம் சப்திகா, குறும்பனை பெர்லின், முட்டம் சகல புனிதர்கள் மேனிலைப்பள்ளி தாளாளர் ஐசக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பங்கு அருட்பணிப்பேரவை செயலர் ஆல்பட் ராஜ் வரவேற்றார். நிறைவாக நூலாசிரியர் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கினார். நிகழ்ச்சியை பங்குப்பேரவை மற்றும் ஊர் மக்கள் இணைந்து நடத்தினர்.
Related Articles
குமரி பேஸ்புக் நண்பர் திருமணத்துக்கு வந்த இருவர் பரிதாபமாக பலி
குமரியில் பேஸ்புக் நண்பர் திருமணத்துக்கு வந்த இடத்தில் ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் உட்பட இருவர் பரிதாபமாக இறந்தனர். குமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வினோபின்ராஜ் (வயது 30). இவருடைய திருமண விழாவுக்கு தன்னுடைய பேஸ்புக் நண்பர்களை அழைத்து இருந்தார். அதன்படி திருமணத்தில் […]
கடலோர மக்கள் சங்கம் பொன்விழா
கடலோர மக்கள் சங்கம் coastel people’s organisation (C.P.O) பொன்விழா நிகழ்ச்சி 2-01-2019 அன்று மாலை 6 மணிக்கு குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையில் நடைபெற்றது. சிபிஒ வின் முன்னாள் தலைவர் திரு ஒளிவர் ஜாய் அவர்கள் வரவேற்று பேசினார். வள்ளவிளையை சார்ந்த IAS அதிகாரி திரு அலெக்ஸ்சாண்டர் அவர்கள் […]
வாரிக்கொடுத்த வளைகுடா – நூல் விமர்சனம்
இந்நூலாசிரியர் பள்ளம் தொ. சூசைமிக்கேல் கன்னியாகுமரி மாவட்டத்தின் “பல்கலைக்கழகம்” என்றால் மிகையாகாது. ‘ பட்டுமணல் மொட்டுக்கள்’,’ ‘திருவள்ளுவர் நெய்தல் நிலத்தவரே’, தொடங்கி பல அரிய நூற்களைத் தமிழுக்கு தந்தவர் அந்த வரிசையில், ‘வாரிக்கொடுத்த வளைகுடா’ நூல். இதை ஒரு அனுபவ நூல் என்பதா, புதினம் என்பதா, அதையும் தாண்டி […]
Be the first to comment