முட்டம் வால்டரின் நெடுவாங்கல் சிறுகதை நூல் வெளியீட்டு விழா

கடல் பூக்கள், மரியான், வன்மம், உள்குத்து போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் சில மலையாளப் படங்களிலும் நடித்தவர்  முட்டம் வால்டர். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு கடல் தொழில் செய்யும் இவர் ஏற்கனவே நெய்தல் மக்களின் பாடுகளை ‘வர்ளம்” என்ற நாவலாக எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது  கடலோர மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் கடலோர மொழியிலேயே இவர் எழுதிய ‘நெடுவாங்கல்”  என்கிற சிறுகதை நூல் வெளியீட்டு விழா முட்டம் பங்குத் தந்தை அருட்பணி. அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
விழாவுக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு நூலை வெளியிட்டுப் பேசினார். அருட்பணி ஸ்டீபன் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர்கள்; குமரி ஆதவன், பள்ளம் சப்திகா, குறும்பனை பெர்லின், முட்டம் சகல புனிதர்கள் மேனிலைப்பள்ளி தாளாளர் ஐசக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  முன்னதாக பங்கு அருட்பணிப்பேரவை செயலர் ஆல்பட் ராஜ் வரவேற்றார். நிறைவாக நூலாசிரியர் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கினார்.  நிகழ்ச்சியை பங்குப்பேரவை மற்றும் ஊர் மக்கள் இணைந்து நடத்தினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*