கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் திட்டமிடல் செய்யாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே துறைமுகத்துக்குள் அலை அடிக்கும் அவல நிலையில் உள்ளது . பொதுவாக ஆனி ஆடி காலங்களில் எழும் ராட்சத அலையில் சிக்குண்டு மீனவர்கள் பலியாவது வழக்கம் . துறைமுகம் வந்ததால் இந்த பிரச்சனை இன்றி மீனவர்கள் துறைமுகம் வழியாக எளிதில் செல்ல வேண்டும் ஆனால் தேங்காய் பட்டணம் துறைமுகத்துக்குள் அலை அடிக்கும் அவல நிலை உள்ளது .இந்த அலையில் சிக்கி மீன்வர்கள் தொடர்ந்து உயிரிழப்பது மிகவும் கவலைக்குரியது .
இரண்டு மீனவர்கள் மாயம்
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (23-7-2020) காலையில் நாட்டுப்படகில் மகனுடன் மீன் பிடிக்க சென்றபோது முள்ளூர்துறையை சார்ந்த ஆன்றணி (வயது 65) என்பவர் அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் மாயமானார் . அதே போன்று நேற்று (24-7-2020) மாலை நாட்டுபடகில் கரை திரும்பியபோது துறைமுக ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் கொல்லங்கோடு பகுதியை சார்ந்து ஷிபு (வயது 24) மாயமானார் . இந்த தொடர் சம்பவங்கள் மீனவர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . துறைமுகம் முறையாக கட்டப்படவில்லை என்பது மட்டுமின்றி ஆழப்படுத்துதல் போதிய பராமரிப்பு பணிகளும் செய்யப்படுவதில்லை .
தொடரும் மீனவர் பலிகளை தடுக்க விரைந்து , அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்
Related Articles
தமிழத்தின் குமரி மாவட்ட தூத்தூர் மண்டலபகுதியை சார்ந்த மீனவர்கள் கேரளா கடலில் தவிப்பு
தமிழத்தின் குமரி மாவட்ட தூத்தூர் மண்டலபகுதியை சார்ந்த மீனவர் படகு நேற்று அதிகாலை கொச்சின் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இன்நிலையில் நேற்று இரவு 10:00 மணிக்கு அவர்களது படகின் இஞ்சின் கோளாறு காரணமாக தீடீர் என்று இஞ்சின் இயக்கம் நிற்று போனதாக கூறப்படுகிறது. எனவே ஏதேனும் அசும்பாவிதங்கள் […]
செயின்ட் ஆன்றணி மேல்நிலை பள்ளி ஆசிரியர் தின கொண்டாட்டம்
5/9/2019 அன்று செயின்ட் ஆன்றணி மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. செயின்ட் ஆன்றணி மேல்நிலை பள்ளி, மணவிளை, கிராத்தூரில் மாணவ மாணவிகளால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கினர். ஆடல்,பாடல் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.
பணக்கெட்டு
பணக்கெட்டு என்றொரு பிற்போக்கான நிகழ்ச்சி கடலோர கிராமங்களில் குறிப்பாக கன்னியாகுமாரி மாவட்ட கடலோர கிராமங்களில் மிக விமர்சையாகவே கொண்டாடப்படுகிறது.வரதட்சிணை எனும் கொடிய நோயின் மறுபிறப்பு இந்த பணக்கெட்டு நிகழ்ச்சி.திருமணம் நிச்சயித்த பின்பு பெண்வீட்டார் மணமகனுக்கு வழங்கும் வரதட்சிணை பணத்தை ஊரார் முன் பிரகடனப்படுத்தி கைமாறுவதும் அதன் பின் கோலாகலமான […]
Be the first to comment