ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் வினோத் அலைகளில் சிக்கி காணாமல் போனார் உடலை தேடும் பணியில் அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள்

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் வினோத் .சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்ற போது அலைகளில் சிக்கி காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் ,இறந்த நிலையில் அவரது உடல் மணமேல்குடிக்கு கிழக்கே உள்ள பகுதியில் மிதந்து வருவதாக தகவல் கிடைத்ததால், இழந்த வினோதின் குடும்பத்தினரும், ‘மீனவம் காப்போம்’ குழுவைச் சார்ந்த சில மீனவர்களும், கொள்ளிக்காடு திரு அந்தோணிசாமி என்பவரும் அப்பகுதியில் முகாமிட்டு உடலை தேடி வருகின்றனர்.

    இன்று மதியம் 12 மணி வரை உடல் கிடைக்காததால் தேடுதல் தொடர்ந்து  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவர்களுடன் மணமேல்குடி, பொன்னகரம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவம் காப்போம்  நண்பர்கள் அவர்களுக்கு உதவியாக தேடுதலின் ஈடுபட ‘மீனவம் காப்போம் ‘நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*