புதுப்பட்டினம், ஆர் எம் ஐ நகரில் வசித்து வரும் உய்யலிகுப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த திரு. சிவகுமார், சோபியா தம்பதியரின் மகள் ஸ்வேதா .
இவர் செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினம் ஊராட்சி, கல்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் +2 பயின்று வந்தார்.
நடப்பாண்டில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
ஆங்கில பாடத்தில் 100க்கு 98 மதிப்பெண் எடுத்து இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். எதிர்காலத்தில் தான் ஒரு மருத்துவராகி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்வதே தனது லட்சியம் என கூறியுள்ளார் .அவரது லட்சியம் நிறைவேற அனைவரும் வாழ்த்துவோம்.
Be the first to comment