தேசிய புத்தக வாசிப்பு தினம் .

தேசிய புத்தக வாசிப்பு தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கிலும்,  குமரி மாவட்ட நெய்தல் எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கிய வீடியோ பதிவுதான் இது .

அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். நல்ல புத்தகங்களை அறிந்து அவைகளை வாங்கி வாசியுங்கள். புத்தக வாசிப்பால் நாம் மேன்மை அடைவோம்.  நம்மால் நம் சமூகம் மேம்படும் .

குமரி மாவட்ட நெய்தல் சமூகத்தில் ஏராளமான எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்கள் மீனவ சமூகத்தின் கண்ணாடிகள். தற்போது சுமார் 25 நூல்கள் ஆண்டுதோறும் வெளிவருகின்றது. அவர்களது நூல்களை வாங்கி வாசிப்போம். அதன் மூலம் நாம் நமது அறிவை பெருக்குவதோடு , மீனவ சமூக வளர்சிக்கும் துணை நிற்போம் .

வாழ்க நெய்தல் படைப்பாளர்கள்! வளர்க நெய்தல் படைப்புகள்! ஓங்குக புத்தக வாசிப்பு

அனைவருக்கும் புத்தக வாசிப்பு தின நல் வாழ்த்துகள் !

– இவண்
கடற்கரை இலக்கிய வட்டம் ,
குமரி மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*