ஃபனி புயல் எச்சரிக்கை விடப்பட்டு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சூறையாடிவிட்டு சென்ற கஜா புயலைவிட தற்போது உருவாகியுள்ள ஃபனி புயலின் வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது வலுவடைந்து கொண்டே வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை 36 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளளது.
இந்த புதிய புயலுக்கு ஃ பனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் பெரும்பாலும் சென்னை அருகே கரையை கடக்கும் . அவ்வாறு கரையை கடக்கும்போது 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கஜா புயலை விட ஃபனி புயலின் வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் குமரியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இரவிப்புத்தன்துறை வள்ளவிளை இடையில் எடப்பாடு பகுதியில் போடப்பட்ட தற்காலிக சாலை நாசமாகி உள்ளது. எனவே போக்குவரத்து மீண்டும் பாதிப்பு அடைந்துள்ளது.
வள்ளவிளை பகுதியில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து வீடுகள் சரிந்து விழுந்துள்ளது. இதுபோல கடியப் பட்டணம் மற்றும் இதர கிராமங்களிலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
Related Articles
நவம்பர் 21: உலக மீனவர் தினவிழா திருமிகு. N.தளவாய் சுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ப்பு
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநி திருமிகு. N.தளவாய் சுந்தரம் அவர்களை கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குநர் அருள்பணி. ஸ்டீபன் மீனவ கூட்டமைப்பு நிர்வாகி குறும்பனை பெர்லின் குளச்சல் பங்குத்தந்தை அருள்பணி. மரிய செல்வன் குளச்சல் விசைப்படகு யூனியன் நிர்வாகி திரு. […]
கடலும்! கடற்கரையும்!! கடலாளிக்கே!!! மீனவ மக்கள் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம்
இந்த கருத்தரங்க நிகழ்வில் பங்குபெற விரும்பும் மீனவ மக்களின் தன்னார்வலர்கள், அனைத்து நிலை மீனவ சொந்தங்களும் தானாக முன் வந்து தங்களது வருகையை உறுதிபடுத்த பெயர், தந்தை பெயர், ஊர், (கிராம பெயர்) மாவட்டம்&தொடர்பு எண்ணை பதிவிடவும்…🔜👉பல குழுவில் இருப்பவர் ஏதாவது ஒரு குழுவில் பெயரை பதிவு செய்தால் […]
Be the first to comment