மணப்புறம் மின்னிதழ் வெளியீடு

 

குமரி மாவட்டம் , சின்னத்துறை மீனவ கிராம பங்கு மக்களுக்காக,  மாத இதழாக வெளிவரும்  மணப்புறம் மின்னிதழ் இன்று சின்னத்துறை புனித யூதா ததேயூ ஆலயத்தில் வைத்து  வெளியிடப்பட்டது . சின்னத்துறை பங்குத்தந்தை அருட்பணி . டோணி முதல் இதழை வெளியிட்டார் . சின்னத்துறை செயின்ட் ஜூட்ஸ் படிப்பகத்தின் சார்பில் வெளிவரும் இந்த இதழில் கதை,  கவிதை,  கட்டுரை,  பொது அறிவு , விடுகதை , ஓவியம் என பல்சுவை படைப்புகளும் உள்ளது . படைப்புகளை email மூலமாகவோ பங்கு பணியாளர் இல்லத்தில் நேரடியாகவோ சென்று கொடுக்கலாம் . சிறந்த படைப்புகளுக்கு பரிசு உண்டு . சமூக வலைதளங்கள் மூலமாக  மின்னிதழை பெறவும் வாசிக்க முடியும் . படைப்பு பற்றிய கருத்துகளும் அடுத்த இதழ் முதல் இடம்பெறும் . புனித யூதா பதிப்பகத்தின் இந்த முயற்சி பங்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*