கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தல் . மீனவர் வாக்கு யாருக்கு ?

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற H . வசந்தகுமார், அண்மையில் உயிரிழந்தார். எனவே இத்தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும் முதலில் தொழிலுக்கே முக்கியத்துவம் எனக் கூறியுள்ள விஜய் வசந்த், அரசியலை பொறுத்தவரை கட்சியின் கருத்துக்கிணங்க நடக்கப் போவதாக கூறியுள்ளார். அதேசமயம், குமரி மக்களவை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வேறு சிலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்

மறுபுறம் பாஜக தரப்பிலும் இடைத்தேர்தலில் களமிறங்க பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே போட்டி எழுந்துள்ளது. மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெறுமா என்பது குறித்து பேசுகையில் அனுதாப அலை இருந்தாலும் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பில்லை என்கிறார் பொன் ராதாகிருஷ்ணன். ஆனால் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க மீனவர்கள் விரும்ப மாட்டார்கள் .

14.93 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் களமிறங்கப் போவது யார், மீனவர்கள் வாக்கு யாருக்கு கிடைக்க போகிறது? வெற்றி வாகை சூடப்போவது யார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*